கொரோனா மூன்றாவது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் - பிரதமர் அறிவுறுத்தல்

கொரோனா 3-வது அலையை தடுக்க சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை மாநிலங்கள் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா மூன்றாவது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் - பிரதமர் அறிவுறுத்தல்
x
கொரோனா 3-வது அலையை தடுக்க சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை மாநிலங்கள் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகம் உட்பட ஆறு மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர், கடந்த சில தினங்களில்  தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 80 சதவீத தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். 

தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு, 

மூன்றாவது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், Card-5 
பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி என்ற அணுகுமுறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். 

மாநிலங்களில் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்த 23 ஆயிரம் கோடி மதிப்பிலான தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளதகாவும், 

அதனை முறையாக பயன்படுத்தி சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை மாநிலங்கள் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். 
Card-8 குழந்தைகளை பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என ஆறு மாநில முதலமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார். 

பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் 

மக்கள் கூட்டம் கூடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அச்சத்தை அதிகப்படுத்தியிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, 

பொதுஇடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதோடு, வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்