இடி, மின்னலுக்கு 68 பேர் இறப்பு - பிரதமர் மோடி இரங்கல்
உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மின்னல் தாக்கி இதுவரை சுமார் 68 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் அமீர் அரண்மனை முன்பு செல்ஃபி எடுத்த 11 பேர் மின்னல் தாக்கியும், கோட்டா மற்றும் டோல்பூர் மாவட்ட குழந்தைகள் 7 பேர் இறந்தனர். மேலும்10 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில், 41 பேரும், மத்திய பிரதேசத்தில் 7 பேரும் இடி, மின்னலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார். இடி, மின்னல் தாக்கி அப்பாவி குழந்தைகள் இறந்தது குறித்து வேதனையும் இரங்கலும் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story