துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட நான்கரை கிலோ ஹெராயின் பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் நான்கரை கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட நான்கரை கிலோ ஹெராயின் பறிமுதல்
x
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் நான்கரை கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து, விமானத்தில் கொச்சி வந்த வந்த பயணிகளை சுங்க இலாக அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, தான்சானிய நாட்டைச் சேர்ந்த அஷ்ரப் சஃபி  என்பவர் உடைமைகளுக்குள் மறைத்து வைத்து ஹெராயின் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அஷ்ரப் சஃபியை கைது செய்த அதிகாரிகள், 25 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்