கர்நாடக துணை முதலமைச்சர் மகன் கார் விபத்து - கார் விபத்தில் விவசாயி பலி

கர்நாடக துணை முதலமைச்சர் மகன் சிதானந்த் சவாடியின் கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
கர்நாடக துணை முதலமைச்சர் மகன் கார் விபத்து - கார் விபத்தில் விவசாயி பலி
x
கர்நாடக துணை முதலமைச்சர் மகன் சிதானந்த் சவாடியின் கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். சிதானந்த் சவாடி தனது குடும்பத்தினருடன் விஜயபுரா வழியாக அதானி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹங்குண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயி மீது கார் வேகமாக மோதியது. படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை நான் ஓட்டவில்லை என்றும், விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கவில்லை என்றும் சிதானந்த் சவாடி மறுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்