ஜூலை 16 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு.. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி?

ஜூலை 16 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு.. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி?
ஜூலை 16 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு.. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி?
x
ஜூலை 16 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு.. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி? 

சபரிமலையில் ஆனி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி  நடை திறக்கப்பட உள்ள நிலையில், பக்தர்களுக்கு அனுமதி வழங்க அரசு உத்தரவிடும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு காத்திருக்கின்றது.கேரளாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு ஒரே நேரத்தில் 15 பேர் வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி  நடை திறக்கப்பட உள்ளது. மாதாந்திர பூஜையின் போது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, அரசை வலியுறுத்துவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டு வருகிறது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களையும், கொரோனா  பாதிப்பு இல்லை என சான்று வாங்கியவர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க  தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்