தேசத்துரோக வழக்கில் விசாரணை நிறைவு - இன்று 3-வது முறையாக ஆயிஷா சுல்தானா ஆஜர்

தேசத்துரோக வழக்கில் இன்று மூன்றாவது முறையாக ஆஜரான ஆயிஷா சுல்தானா, விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.
தேசத்துரோக வழக்கில் விசாரணை நிறைவு - இன்று 3-வது முறையாக ஆயிஷா சுல்தானா ஆஜர்
x
லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல்,கெடுபிடி சட்டங்களை கொண்டு வந்து, உயிரி ஆயுதமாக இருப்பதாக அவர் விமர்சித்தார். இதையடுத்து,ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், சுல்தானா, கடந்த  சனிக்கிழமை கொச்சியிலிருந்து லட்சத்தீவு சென்றார். ஞாயிறுகிழமை  கவரத்தியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து அவர் இன்று மூன்றாவது முறையாக ஆஜராக விளக்கம் அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நடிகை ஆயிஷா சுல்தானா விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர், நாளை அல்லது நாளை மறுநாள் கொச்சி திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்