தூய்மை இந்தியா இயக்க திட்டத்திற்கு ஒப்புதல்; 2 லட்சம் கிராமங்களுக்கு ரூ.40,700 கோடி நிதி
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய அரசு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 40 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மத்திய அரசு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 40 ஆயிரத்து 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக 14 ஆயிரம் கோடி ரூபாயும், மாநிலங்கள் செலவு செய்ய வேண்டிய தொகை 8 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15-வது நிதிக்குழுவின் 12 ஆயிரத்து 730 கோடி ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 100 கோடி ரூபாயும் கிடைக்க செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story