"3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி" - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்கள் அனைவருக்கும் அடுத்து 3 மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி - அரவிந்த் கெஜ்ரிவால்
x
இது தொடர்பாக காணொலி வாயிலாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மருந்து நிறுவனங்களிடம் பேசி வருகிறோம், நாளை மறுதினத்துக்குள் தடுப்பூசிகள் வந்து சேர்ந்துவிடும் என தெரிவித்தார். 2 தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்தும் தலா 67 லட்சம் தடுப்பூசிகளை கேட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவைகள் 3 மாதத்திற்குள் கிடைக்கப்பெறும் என்றார். அத்துடன், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது சமூக இடைவெளி காணாமல் போகும் என்றும் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்தார். எனவே, டெல்லி வாசிகள் ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுகொண்ட  அவர், அனைருக்கும் 3 மாதத்தில் விலையில்லா கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்