ஏ.டி.எம். பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு - துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளை

ஹைதராபாத்தில் ஏ.டி.எம். மையத்தில் பாதுகாவலர் மீது துப்பாக்கி சூடு நடத்தி, ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள குகட்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியில் வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, பணம் நிரப்பிக் கொண்டிருந்த அதிகாரியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த பாதுகாவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஐந்து லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்