கொரோனா பரவல் புதிய உச்சம் - ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
x
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரங்களில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 1 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர் என்றும்  

கொரோனா பாதிப்பு சிகிச்சையில் உள்ளோர் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் நாடு  முழுவதும் 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்