படகு மீது கப்பல் மோதிய விபத்து - கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

மங்களூரு அருகே சரக்கு கப்பல் மோதிய விபத்தால், 14 மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் இதுவரை 6 சடலம் மீட்கப்பட்டுள்ளது.
படகு மீது கப்பல் மோதிய விபத்து - கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
x
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகு மீது சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் மோதியது. இதில், படகில் இருந்த 14 மீனவர்களும், கடலில் மூழ்கிய நிலையில், தமிழக மீனவர்கள் உள்பட 6 பேரை கடற்படையினர் சடலமாக மீட்டனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 6 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மீனவர்களை தேடும் பணியில் ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக் என்ற அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்