குடிசைப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இளைஞர்கள் குழுவின் கல்விச் சேவை - எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம்

கொரோனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், குடிசைப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு, இளைஞர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.
குடிசைப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இளைஞர்கள் குழுவின் கல்விச் சேவை - எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம்
x
கொரோனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், குடிசைப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு, இளைஞர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர். டெல்லி மயூர் விகார் பகுதியில் ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனாவால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்க செல்லவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால், அங்குள்ள மேம்பாலத்திற்கு கீழ் கரும்பலகை வைத்து, இளைஞர்கள் குழு, மாணவர்களுக்கு, பாடம் நடத்தி வருகின்றனர்.  எல்.கே.ஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாகவும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடத்துவதாக அந்த இளைஞர்கள் தெரிவித்தனர். தங்களது இந்த முயற்சிக்கு, பெற்றோர்களும், மாணவர்களுக்கும் ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்