"எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்" - மம்தா மீது ராஜ்நாத் சிங் பாய்ச்சல்

எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார், பா.ஜ.க.மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்
எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் - மம்தா மீது ராஜ்நாத் சிங் பாய்ச்சல்
x
எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார், பா.ஜ.க.மூத்த தலைவரான ராஜ்நாத் சிங். மேற்குவங்க மாநிலம் சொரூப் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜநாத் சிங் நானும் முதலமைச்சராக இருந்துள்ளேன் என்றும், ஒரு முதலமைச்சர் எப்படி செயல்படுவார் என எனக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை ம்ம்தா பானர்ஜி மீறியதாக, தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அவருக்கு தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், தற்போது ஆணையத்தை எதிர்த்து மம்தா போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், யாரையும் விட்டு வைக்க மாட்டீர்களா மம்தா என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தொலைக்காட்சியில், வெடிகுண்டு செய்யும் தொழிற்சாலைகளை பார்த்ததாகவும், அவை அரசுக்கு உரியவை என தாம் நினைத்ததாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஆனால் அவை உண்மையிலேயே எதிர்க்கட்சியினரை தாக்க என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக ராஜநாத் சிங் கூறினார். இது எப்படி இங்கு சாத்தியம் என கேள்வி எழுப்பிய ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் நிலையில் இங்கு ஒன்று குண்டுகள் இருக்கும் அல்லது நாங்கள் இருப்போம் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்