புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 168 நபர்களும், காரைக்காலைச் சேர்ந்த 5 நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் இங்கு கோரோனாவால் 42 ஆயிரத்து 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 40 ஆயிரத்து 442 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மருத்துவமனைகளில் ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 687 ஆக உயர்ந்துள்ளது.
Next Story