மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 52 வது ஆண்டு தொடக்க விழா - உள்துறை செயலாளர் பங்கேற்பு

மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 52 வது ஆண்டு தொடக்க விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 52 வது ஆண்டு தொடக்க விழா - உள்துறை செயலாளர் பங்கேற்பு
x
மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 52 வது ஆண்டு தொடக்க விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காசியாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஏதுவாக, கடந்த 1969 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பிரத்யேக சட்டத்தின் கீழ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படை, துணை ராணுவப் படையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளித்து வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் 12 பட்டாலியன்கள் மற்றும் 8 பயிற்சி மையங்கள் உள்ளன. 


 


Next Story

மேலும் செய்திகள்