"கிராமங்களுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு" - பிரதமர் மோடி

விவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கிராமங்களுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு - பிரதமர் மோடி
x
விவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டை சிறப்பாக அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். கருத்தரங்கில் பேசிய அவர், இந்தியாவில் வேளாண் உற்பத்தி இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என்றும்

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை பதப்படுத்துதலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார். இதற்காக விவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். வேளாண்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார். 


இந்தியாவில் பல ஆண்டுகளாக இருந்துவரும் ஒப்பந்த பண்ணை முறை விவசாயம் வெறும் வியாபாரமாக மட்டும் இருக்க கூடாது என்றும் நிலம் தொடர்பான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். 



Next Story

மேலும் செய்திகள்