புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
x
டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நிதின் கட்கரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, 
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதுச்சேரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, குடியரசுத்தலைவருக்கு  
அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 22ஆம் தேதி, பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. அப்போது, சபாநாயகர் சிவக்கொழுந்து, பெரும்பான்மை இல்லை என்பதை குறிப்பிட்டார். இதையடுத்து, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 


Next Story

மேலும் செய்திகள்