"உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி..." - பிரதமர் மோடி பெருமிதம்

தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண் மற்றும் சுகாதார துறைக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி... - பிரதமர் மோடி பெருமிதம்
x
29-வது நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். பிரதமர் மோடி பேசுகையில், கொரோனாவுக்கு எதிராக போரிட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு இந்தியா அனுப்புவதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் பேசுகையில் கொரோனா காலத்தில் பல துறைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப துறை மட்டும் 2 சதவீத வளர்ச்சி கண்டது எனக் கூறினார். அரசின் புதிய அணுகுமுறைக்கு இது சாட்சியாக திகழ்வதாக குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பத் துறையில் இருந்த தேவையற்ற கட்டுபாடுகளை அரசு நீக்கி இருப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும், தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண் மற்றும் சுகாதார துறைக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்