புயல் நிவாரணம், விவசாயிகளை சேரவில்லை - பாஜக பேரணியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஊழல், குற்றம், வன்முறை, ஜனநாயக படுகொலை ஆகியவற்றின் மறுபிறப்பே, திரிணாமூல் காங்கிரஸ் அரசு என, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
ஊழல், குற்றம், வன்முறை, ஜனநாயக படுகொலை ஆகியவற்றின் மறுபிறப்பே, திரிணாமூல் காங்கிரஸ் அரசு என, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம் ஹல்தியாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில், பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தை கேட்டாலே, கோப்படுவார் என, பிரதமர் நரேந்திர மோடி புகார் கூறியுள்ளார். புயலுக்காக மத்திய பாஜக அரசு அனுப்பிய, நிவாரணத்தொகை பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்றார். இதே போல், பிரதம மந்திரி விவசாயி திட்டத்தின் கீழ் போதுமான பலன்களை மேற்குவங்க விவசாயிகள், அனுபவிக்கவில்லை என மோடி குற்றஞ்சாட்டினார்.
Next Story