குண்டு வீசும் குட்டி விமானங்கள் தயாரிப்பு - 250 கிலோ ஏவுகணையுடன் தாக்குதல்

எதிரிநாட்டு எல்லைக்குள் குண்டு வீசும் குட்டி விமானங்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்.
குண்டு வீசும் குட்டி விமானங்கள் தயாரிப்பு - 250 கிலோ ஏவுகணையுடன் தாக்குதல்
x
எதிரிநாட்டு எல்லைக்குள் குண்டு வீசும் குட்டி விமானங்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்.

ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சியின் போது சிஏடிஎஸ் வாரியர், சிஏடிஎஸ் ஹண்டர் மற்றும் சிஏடிஎஸ் ஆல்பா ஆகிய 3 ஆளில்லா குட்டி விமானங்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன.

எதிரிநாட்டு ரேடார் கட்டுப்பாட்டை உடைத்து எல்லைக்குள் ஊடுருவி சென்று ஏவுகணைகள், குண்டுகளை வீசும் வகையில்  இந்த குட்டி விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் உருவாக்கி வருகிறது.
  
400 கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டில் குட்டி விமானங்களை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது என்றும், இவை 2024-25க்குள் பயன்பாட்டிற்குள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த வகையிலான குட்டி விமானங்கள் தாய் போர் விமானத்துடன் பொருத்தப்பட்டு இருக்கும். எல்லையில் நின்றுக்கொண்டு போர் விமானம் இவற்றை விடுவிக்கும் போது, நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இவற்றௌ இயக்கும் கட்டுப்பாடு தாய் விமானத்திடம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானத்துடன் பொருத்தப்படும் வாரியர் குட்டி விமானங்களால் எதிரிநாட்டுக்குள் ஊடுருவி 750 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்க முடியும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் இயக்குநர் அருப் சாட்டர்ஜி கூறியுள்ளார்.  

இதனால் 250 கிலோ அளவிலான வெடிகுண்டுகள், ஏவுகணைகளை எதிரிநாட்டுக்குள் வீசிவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வரமுடியும் என்றும் தேஜஸ், ஜாகுவார், சுகோய் போர் விமானங்களில் இவற்றை பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   

ஹண்டர் குட்டி விமானங்கள் ஒரு ஏவுகணையாகவே செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது எனவும் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனை கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றை பாதுகாப்பான தொலைவில் நின்று தேஜாஸ், ஜாகுவார் மற்றும் சுகோய் 30 எம்.கே.ஐ. விமானங்களில் இருந்து விடுவிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்று ஆல்பா குட்டி விமானங்களால் ஒரே நேரத்தில் 24 டிரோன்களை விடுவிக்க முடியும் என்றும் இதில் ஒவ்வொரு டிரோன்களும்  இலக்கின் மீது 5 கிலோ எடையிலான வெடிகுண்டுகளை வீசும் திறனை கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே எதிரிநாட்டுக்குள் பிரவேசிக்கும் விமானங்களை காக்கும் வகையிலான நேத்ரா உளவு விமானத்தை இஸ்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தயாரித்து வெற்றி கண்டுள்ளது. இந்த விமானம் விமானப்படையில் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று இந்திய  விமானப்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் இந்த குட்டி விமானங்களும் திட்டமிட்டப்படி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்