கணவருடன் விவாகரத்து சிக்கல் இல்லை - லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்க்கை

அரை நிர்வாண உடையில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து சர்ச்சையில் சிக்கிய கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா தன் கணவரை பிரிய உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
கணவருடன் விவாகரத்து சிக்கல் இல்லை - லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்க்கை
x
அரை நிர்வாண உடையில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து சர்ச்சையில் சிக்கிய கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா தன் கணவரை பிரிய உள்ளதாக தெரிவித்து உள்ளார்.சபரிமலை செல்லும் பக்தர்கள் அணியும் உடையை ஆபாசமாக அணிந்தது, இருமுடி கட்டி சபரிமலை சென்று ரகளை செய்தது, அரை நிர்வாண உடையில் இருந்தவாறு தன் 2 குழந்தைகளை விட்டு ஓவியம் வரைந்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் ரெஹானா பாத்திமா. பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ரெஹானா டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை பிரிய உள்ளதாக ரெஹானா தெரிவித்து உள்ளார். மேலும் கணவர் மனோஜ் ஸ்ரீதருடன் திருமணம் செய்யாமல் லிவ்விங் டூ கெதர் முறையில் இதுவரை வாழ்ந்து வந்ததால் விவாகரத்து செய்வதில் சிக்கல் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார். தற்போதைய ரெஹானாவின் கருத்து பொது மக்களிடையே கூடுதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்