திருப்பதி கோயில் நுழைவு வாயிலில் புதிய தங்க தகடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடத்தில் மூன்று கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது.
திருப்பதி கோயில் நுழைவு வாயிலில் புதிய தங்க தகடு
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில், கொடி மரம், பலிபீடத்தில் மூன்று கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ராஜகோபுரம் நுழைவாயில் கொடிமரம் பலிபீடம் ஆகியவற்றுக்கு பொருத்தப்பட்டுள்ள தங்க தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டதால், அவை தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. 6.625 கிலோ தங்கத்தால் ஆன தங்க தகடுகள், 68 கிலோ செம்புடன் சேர்த்து தயார் செய்யப்படும் எனவும்   இந்த பணிகள் 2 மாதத்தில் முடிக்கப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்