கர்நாடகாவில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் - கர்நாடக அரசு அனுமதி
கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கும் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவை 24 மணிநேரமும் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் அம்மாநில பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு ஊழியர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்றலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும், பெண் ஊழியர்களுக்கு வாகனப் போக்குவரத்தை, சம்மந்தப்பட்ட நிறுவனமே ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
Next Story