பென்னா நதியில் நீராடிய 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூரில், பென்னா நதியில் குளித்த 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பென்னா நதியில் நீராடிய 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
x
திருப்பதி கொரலகுண்டா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர்  கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, கரை புரண்டு ஓடும் பென்னா நதியில் நீராடினர். அப்போது நதியில் குளித்து கொண்டிருந்த 8 பேரையும் திடீரென தண்ணீரின் வேகத்திற்கு இழுத்து சென்றது. அவர்களில் சோம சேகர் என்ற இளைஞர் மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். மீதமுள்ள ராஜேஷ், சங்கரா, ஜெகதீஷ்,யாஷ், சதீஷ், நானி , தருண் ஆகிய 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று நீச்சல் வீரர்கள் துணையுடன் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் தற்போது வரை மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்