கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உடனடியாக மீட்ட காவல்துறை அதிகாரி, ஆட்டோ ஓட்டுனர்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், கிணற்றில், தவறுதலாக விழுந்த மூதாட்டியை காவல்துறை அதிகாரியும், ஆட்டோ ஓட்டுநரும் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உடனடியாக மீட்ட காவல்துறை அதிகாரி, ஆட்டோ ஓட்டுனர்
x
மாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி, ஒருவர் தவறுதலாக தனது வீட்டில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் சதாசிவ ராகவ், மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் நாயக் உடன் இணைந்து கிணற்றில் இறங்கி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத்துறையை, சேர்ந்த விநாயக் உடன் சேர்ந்து மூதாட்டியை, பத்திரமாக மீட்டனர். கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை, துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய, காவல்துறை அதிகாரி சதாசிவ ராகவ் மற்றும் ஆட்டோ ஓட்டுனருக்கு, பாராட்டுக்ககள் குவிந்து வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்