போதைக்காக கிருமி நாசினி குடித்த 10 பேர் பலி - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், கிருமிநாசினியை குடித்து 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
ஆந்திர மாநிலத்தில் மது விலை உயர்வை அடுத்து நாளுக்கு நாள் மது கடத்தல் மற்றும் சாராயம்  தயாரித்தல், கிருமிநாசினியை போதைக்காக குடித்தல் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குறிசொரு பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கிருமி நாசினி குடித்தனர். இதில் வயிற்று வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்