36 ஆண்டுகளாக பணியாற்றிய விமானி ஓய்வு-வழியனுப்பும் விழா

ஏர்-இந்தியா விமான நிறுவனத்தில் 36 ஆண்டுகளாக பணியாற்றிய ஜெபஸ்டியன் ஜோசப் என்ற விமானி ஒய்வு பெற்றார்.
36 ஆண்டுகளாக பணியாற்றிய விமானி ஓய்வு-வழியனுப்பும் விழா
x
ஏர்-இந்தியா  விமான நிறுவனத்தில்  36 ஆண்டுகளாக  பணியாற்றிய ஜெபஸ்டியன் ஜோசப் என்ற விமானி ஒய்வு பெற்றார். அவர்  ஒய்வு பெறும் நாளில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானிற்கு விமானத்தை இயக்கினார். பின்னர் அந்தமானில் இருந்து சென்னை திரும்பினார். விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமானி ஜெபஸ்டியன் ஜோசப்புக்கு மரியாதை செலுத்தி வழியனுப்பும் வகையில் விமானத்திற்கு இருபுறமும் தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு  சக விமானிகள், அதிகாரிகள் மலர் கொத்து வாழ்த்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்