டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது

டெல்லியில் கன மழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.
x
டெல்லியில் அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ராஜ்பாத், இந்தியா கேட், தீன் மூர்த்தி மார்க், மின்டோ சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், நனைந்தபடி மக்கள் சென்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் கால்வாய் ஓரமிருந்த வீடுகள், இடிந்து விழுந்தது. கால்வாய் பகுதிக்குள் வீடு இடிந்து விழுந்ததை பார்த்த அப்பகுவாசியகள் தலைதெறிக்க ஓடினர். இந்த விபத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்