மாம்பழங்களை திருடிச் சென்ற பொதுமக்கள் - ரூ. 30 ஆயிரம் மாம்பழங்கள் பறிபோன அவலம்...

டெல்லியில் ஜகத்புரி பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை பொதுமக்கள் பணம் கொடுக்காமல் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பழங்களை திருடிச் சென்ற பொதுமக்கள் - ரூ. 30 ஆயிரம் மாம்பழங்கள் பறிபோன அவலம்...
x
டெல்லியில் ஜகத்புரி பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை பொதுமக்கள் பணம் கொடுக்காமல் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பழங்களை வாங்கி சாலையோரம் வைத்த வியாபாரியிடம் சிலர் இங்கே கடை போடக் கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது. இது குறித்த பேச்சு வார்த்தைக்காக வியாபாரி அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி, சாலையில் போவோர் வருவோர் எல்லாம் கையில் கிடைத்த அளவு மாம்பழங்களை அள்ளிச் சென்றிருக்கின்றனர். ஒற்றுமை தேவைப்படும் இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதற்கு எதிர்மாறாக இருப்பதாகக் கூறி இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்