கொரோனாவில் இருந்து குணம​டைவோர் எண்ணிக்கை 34.06 % ஆக உயர்வு - மத்திய சுகாதாரத்துறை தகவல்

கொரோனா தொற்று பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்த நிலையில், குணமடைபவர்கள் விகிதம் 34 சதவீதமாக அதிகரி​த்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ​
கொரோனாவில் இருந்து குணம​டைவோர் எண்ணிக்கை 34.06 % ஆக உயர்வு -  மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
கொரோனா தொற்று பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்த நிலையில், குணமடைபவர்கள் விகிதம் 34 சதவீதமாக அதிகரி​த்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ​நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 57 ஆயிரத்து 41 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையில் உள்ளதாகவும் சுகாதாரஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு  இரண்டாயிரத்து 649 பேர் உயிரிழந்த நிலையில், 27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்பிக்கை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்