ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை
ஏர் இந்தியா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்
ஏர் இந்தியா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக ப. சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போது அவர், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்தார். இந்நிலையில், ப. சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை புதிதாக மீண்டும் சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமையன்று ஆஜரானார்.
Next Story