"சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் தடுத்து நிறுத்துவோம்"

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால், தடுத்து திருப்பி அனுப்புவோம் என பந்தள மன்னர் வம்சத்தின், மகள் வழி பேரன், ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் தடுத்து நிறுத்துவோம்
x
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக, நேற்று மாலை 5 மணிக்கு, கோவில் நடைதிறக்கப்பட்டது. கார்த்திகை மாத முதல் நாளான இன்று, ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திருப்தி தேசாய் உட்பட பல பெண்கள் சபரிமலைக்கு வருவதாக தகவல் வெளியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பந்தள மன்னர் வம்சத்தின் மகள் வழி பேரன் ராகுல் ஈஸ்வர், சபரிமலைக்கு வரும் இளம் பெண்களை, கோயிலுக்கு செல்லவிடாமல், தடுத்து திருப்பி அனுப்புவோம் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்