கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற நண்பர்கள் : குளிப்பதை வீடியோ எடுத்த போது மூழ்கியவர் பலி
கர்நாடகா மாநிலம், கலபுர்கி புறநகர் அருகே மிஜகுரி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அயூப், தமது 2 நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றார்.
கர்நாடகா மாநிலம், கலபுர்கி புறநகர் அருகே மிஜகுரி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அயூப், தமது 2 நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றார். தண்ணீரில் குளிப்பதை நண்பர்கள் செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஜாபர் அயூப், திடீரென தண்ணீரில் மூழ்கினார். காப்பாற்றும்படி அவர் சைகை செய்தும், கரையில் இருந்த நண்பர்கள் அதை கண்டுகொள்ளாமல் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story