நாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து
நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.
நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும், வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார். உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இல்லை என்றும், வேலைக்கு தகுதியானவர்கள் வட இந்தியாவில் குறைவான உள்ளதாகவும் கூறினார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் வட இந்தியர்களுக்கு தகுதியில்லை என கூறி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் விமர்சித்துள்ளார்
Next Story