பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட16 வயது சிறுமி - போலீசார் விசாரணை

ஆந்திர மாநிலம் சித்தூரில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட16 வயது சிறுமி - போலீசார் விசாரணை
x
பானிபூரி வியாபாரம் செய்துவரும் ஸ்ரீசந்திரா என்பவர் தன் குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் சித்தூர் ஸ்ரீகாளஹஸ்தி எல்லைபகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக வாழ்ந்து வந்துள்ளார். பானிபூரி விற்பனை தொழிலாக கொண்ட சந்திரா, சம்பவத்தன்று மகன் மற்றும் மகளை வீட்டில் விட்டுவிட்டு, தன் மனைவியுடன் பானிபூரி விற்க சென்றுள்ளனர். அப்போது வெளியே சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற 16 வயது சிறுமி, இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சந்திராவின் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடிக்கொண்டிருந்த நிலையில், 16 வயது சிறுமி அங்குள்ள சிலகா மாகலட்சுமி கோவில் பின்புறத்தில் குப்பை கிடங்கு அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சிறுமி பலாத்காரம் செய்துகொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்