ரவுடியை வைத்து, மனைவியே, கணவனை கொன்ற சம்பவம் : மேலும் ஒரு ரவுடி கைது - முக்கிய குற்றவாளிகளுக்கு வலை
புதுச்சேரி நெல்லித்தோப்பில், கணவனை ரௌடியுடன் சேர்ந்து, மனைவியே கொலை செய்த வழக்கில் மேலும் ஒரு ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சாக்கடையில் சடலமாக கிடந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவரது மனைவி ஸ்டெல்லா , அவரது அக்காவின் ஆண் நண்பர் தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் விமல்ராஜ் , விக்கி ஆகியோர் சேர்ந்து கமலக்கண்ணனை கொலை செய்து வீசியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டெல்லாவை கடந்த 9 ம் தேதி கைதுசெய்த போலீசார், தமிழ்மணியின் நண்பரான விமல்ராஜை இன்று கைது செய்தனர். கமலக்கண்ணன் உடலை எடுத்துச்சென்று வீசுவதற்கு இவர் உடந்தையாக இருந்ததாக கூறிய போலீசார், முக்கிய குற்றவாளியான தமிழ்மணி மற்றும் விக்கி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story