"நாட்டு மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்" - பிரதமர் மோடி

கேதார்நாத்தில் தியானத்தை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 2013 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவுக்கு பிறகு கேதர்நாத்துக்கும், தமக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டேன் - பிரதமர் மோடி
x
கேதார்நாத்தில் தியானத்தை முடித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, 2013 ஆம் ஆண்டு இயற்கை பேரழிவுக்கு பிறகு கேதர்நாத்துக்கும், தமக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். கேதார்நாத்தை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அயல்நாடுகளுக்கு மக்கள் செல்வதை தாம் தடுக்கவில்லை என்றும் கூறிய அவர், அதேநேரம் நமது நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாதளங்களுக்கும் பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இறைவனிடம் என்ன வேண்டிக்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேர்தல் வெற்றி உள்ளிட்ட எதற்காகவும் வேண்டிக்கொள்ளவில்லை என்றும், நாட்டு மக்களுக்காகவே பிரார்த்தனை செய்ததாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்