"ஒன்றே பணி ஒன்றே திசை - இதுவே தாரக மந்திரம்" - பிரதமர் மோடி

ஒன்றே பணி, ஒன்றே திசை என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றே பணி ஒன்றே திசை - இதுவே தாரக மந்திரம் - பிரதமர் மோடி
x
டெல்லியில் 2019 பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாட்டு மக்களின் பிரச்சனைகளை, அலசி ஆராய்ந்து, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக, பன்முகத்தன்மையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தேர்தல் அறிக்கையில் 75 சிறப்பு வாய்ந்த திட்டங்கள், கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து துறையிலும் நாடு வளர்ச்சி அடைய, ஒன்றே பணி, ஒன்றே திசை என்பதே தாரக மந்திரம் என, பிரதமர் மோடி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்