பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்
படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு
உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி, படகில் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார். பிரயாக்ராஜ் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பின் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி , சாத்நங் பகுதியில் இருந்து வாரணாசியின் அஸ்சி கட் பகுதி வரை 3 நாள் கங்கா பிரசார யாத்திரையை தொடங்கினார். படகில் பொதுமக்களுடன் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார். நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியின் பிரசாரம் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story