குடும்ப தகராறு - தாயை கொலை செய்த மகன்

புதுச்சேரியில் குடும்ப தகராறில் தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு - தாயை கொலை செய்த மகன்
x
புதுச்சேரியில் குடும்ப தகராறில்  தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர்  ஜெயமேரி. இவரின் மகனான அமலோற்பவநாதன், தாயை கொலை செய்ததாக கூறி போலீசில் சரண் அடைந்தனர். அவனிடம்  நடத்திய விசாரணையில் தாயை கொலை செய்து 4 நாட்களாக பிரேதத்துடன் தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஜெயமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்