கட்டாய ஹெல்மெட் சட்டத்தில் முதல்வர் தலையிடுவது ஏன்? - ஆளுநர் கிரண்பேடி கேள்வி

அமலில் உள்ள கட்டாய ஹெல்மெட் சட்டத்தில் முதல்வர் ஏன் தலையிடுகிறார் என்று புதுவை ஆளநர் கிரண்பேடி கேள்வி எழுப்பினார்.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தில் முதல்வர் தலையிடுவது ஏன்? - ஆளுநர் கிரண்பேடி கேள்வி
x
ஆளுநர் மாளிகையில், மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கட்டாய ஹெல்மெட் சட்டம் மிகவும் அவசியம் என்று கூறிய அவர், கடந்த ஆண்டில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3ல் 2 பேர், ஹெல்மெட் அணியாததன் காரணமாகவே இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலில் உள்ள போது, அதில்  முதல்வரின் தலையீடு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்