மும்பையில் நடன விடுதிகள் தொடங்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
மும்பையில், கேளிக்கை நடன விடுதி தொடங்கவும், நடத்தவும், மஹாராஷ்டிரா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
மும்பையில், கேளிக்கை நடன விடுதி தொடங்கவும், நடத்தவும், மஹாராஷ்டிரா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.நடன விடுதிகளை முழுமையாக மூடி விட முடியாது என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வேண்டுமென்றால் கட்டுப்பாடுகளை உருவாக்கி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
நடன விடுதிகளில் ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுக்க கூடாது என்ற மஹாராஷ்டிரா அரசின் விதியை தளர்த்தியுள்ள உச்சநீதிமன்றம், டிப்ஸ் கொடுப்பவர்கள் பணத்தை வாரி இறைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதேபோல, நடன விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற விதியையும் உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ளது.விடுதிகளில் பாடல் கச்சேரிகளை நடத்தக்கூடாது, நடனமாடும் பெண்களுக்கு மாத சம்பளம் அளிக்க வேண்டும் போன்ற விதிகளையும் உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
Next Story