"நாடு முன்னேற விவேகானந்தர் காட்டிய வழி" - கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி புகழாரம்
ஆந்திர மாநிலம், சித்தூர் அரசு அம்பேத்கர் பவனில் சுவாமி விவேகானந்தர் 156 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஆந்திர மாநிலம், சித்தூர் அரசு அம்பேத்கர் பவனில் சுவாமி விவேகானந்தர் 156 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி தாமா சேஷாத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். ஒரு தனி மனிதன் ஒழுக்கமாக இருந்தால் அவரின் குடும்பம் ஒழுக்கமாக இருக்கும் என்றும், அந்த குடும்பம் ஒழுக்கமாக இருந்தால் நாடு ஒழுக்கமாக இருக்கும் என்றும் விவேகானந்தர் கூறியதை சுட்டிக்காட்டினார். விவேகானந்தரைப் போல் வாழ முடியாவிட்டாலும் அவர் சொல்லிவற்றை கடைபிடித்தால் நாடு முன்னேறும் என்றும் நீதிபதி தாமா சேஷாத்ரி குறிப்பிட்டார்.
Next Story