பிரதமர் மோடி அந்தமான் பயணம்

சுனாமி நினைவிடத்தில் மோடி அஞ்சலி
பிரதமர் மோடி அந்தமான் பயணம்
x
இன்று அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 1943 ஆம் ஆண்டு, இரண்டாம் உலக போரின் போது, அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ், அந்தமானில் உள்ள போர்ட் பிளையர் துறைமுகத்தில் இந்திய தேசிய கோடியை ஏற்றினார். அதன் 75 வது நினைவு ஆண்டை முன்னிட்டு, அந்தமான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு தேசிய கொடி ஏற்றவிருக்கிறார். நேதாஜியை கவுரவிக்கும் விதமாக தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்