சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...

நடை திறக்கப்பட்டு 23 நாட்களான நிலையில், சனிக்கிழமை காலை முதல் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...
x
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பாலும், போலீசாரின் பல கட்டுப்பாடுகளாலும், சபரிமலைக்கு  கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இந்தநிலையில்,  நடை திறக்கப்பட்டு 23 நாட்களான நிலையில், சனிக்கிழமை காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நாளை ஞாயிற்று கிழமை என்பதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகை குறைவு காரணமாக தேவசம் போர்டுக்கு வருவாய் குறைந்த நிலையில், தற்பொழுது மீண்டும்  வருவாய் அதிகரிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்