சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் சோதனை - மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள்

சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் சோதனை - மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்கள்
x
சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நடந்த நில விற்பனையில், சட்ட விரோத பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை வழக்குபதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரிக்க, 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் ராபர்ட் வதேரா, ஆஜராகவில்லை. இந்நிலையில், டெல்லி சுக்தேவ் விகார் பகுதியில் உள்ள ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். அவரது, நெருங்கிய நண்பர்கள் 3 பேரின் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து, மூட்டை மூட்டையாக ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்