மீட்பு பணியின் போது, டிவியை முதல் மாடியில் வைத்தால் தான் வருவேன் என கூறிய மூதாட்டி

தண்ணீரால் சூழப்பட்ட ஒரு வீட்டுக்கு சென்ற ஸ்வயம் சேவக் அமைப்பினருக்கு அதிர்ச்சி அளித்த மூதாட்டி
மீட்பு பணியின் போது, டிவியை முதல் மாடியில் வைத்தால் தான் வருவேன் என கூறிய மூதாட்டி
x
கேரளாவை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு மீட்புப்பணியில் தன்னார்வ தொண்டர்களும், பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தண்ணீரால் சூழப்பட்ட ஒரு வீட்டுக்கு ஸ்வயம் சேவக் அமைப்பினர் சென்றபோது, அங்கு வயதான பெண் ஒருவர் இருந்துள்ளார். இங்கு பாதுகாப்பு இல்லாததால் தங்களுடன் வருமாறு அவர்கள் அழைத்ததற்கு, அந்த பெண், இங்குள்ள தொலைக்காட்சியை முதல் மாடிக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு கோரியுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த அவர்கள், தங்களுடன் வந்தால்தான், டிவி-யை முதல் மாடிக்கு கொண்டு செல்வோம் என ஸ்வயம் சேவக் அமைப்பினர்  கூறியுள்ளனர். இதற்கு அந்தப் பெண் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, அவரை பாதுகாப்பாக அவர்கள்  மீட்ட சுவராஸ்ய சம்பவமும் அங்கு  நடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்