20 தொகுதிகள்.. தேர்தலுக்கு தயாரான சத்தீஸ்கர் - இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

x

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது . முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றும்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இம்மாதம் 17ம் தேதியும் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு, இன்று நடைபெற உள்ளது. இதில் பல கட்சிகளை சேர்ந்த 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவுக்காக 5 ஆயிரத்து 304 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்