ஒரே நேரத்தில் பிரிந்த 13 உயிர்கள்.. கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளாவில் ஒரே நாளில் 13 பசுக்கள் உயிரிழந்த நிலையில், 5 பசுக்கள் கவலைக்கிடமாக உள்ளன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மேத்யூ பென்னி, அவரது சகோதரர் ஜார்ஜ் ஆகியோர், பசுக்களை வளர்த்து வருகின்றனர். மேத்யூ பென்னிக்கு சிறந்த விவசாயிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேத்யூ பென்னி வளர்த்து வந்த 13 பசுக்கள் ஒரே நேரத்தில் இறந்தன. 5 பசுக்களின் உடல்நிலை மோசமாக உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மேத்யூ பென்னி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பசுக்கள் உயிரிழப்பு தொடர்பாக கால்நடைத்துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில், பசுக்கள் உட்கொண்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவன் மேத்யூ பென்னி, இந்த சோகத்தில் இருந்து மீண்டு வரவும், பசுக்களை தொடர்ந்து வளர்க்கவும் உதவியாக, நடிகர் ஜெயராம், 5 லட்சம் ரூபாய் வழங்க முன்வந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்