மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு

x

நடிகர் யோகிபாபு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை "ஒரு கிடாயின் கருணை மனு" மற்றும் "சத்திய சோதனை" படங்களை இயக்கிய, சுரேஷ் சங்கையா இயக்குகிறார். லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்